டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 316 பேருக்கும் டில்லியில் 1674 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,72,288 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,038 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 996 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,59,624 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 5,626 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

டில்லியில் இன்று 1,674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 5,93,924 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 62 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,706 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,818 பேர் குணம் அடைந்துள்ளனர்.    இதுவரை 5,61,732 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 22,486 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.