டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 3,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,93,640 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இன்று 17 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 3,625 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,606 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,19,156 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 70,625 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம், இடத்தில் உள்ளது.

 

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,87,066 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 7,149 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 141 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,78,528 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  

தற்போது 1,389 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.