டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 137, கேரளாவில் 6,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,86,694 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 7,126 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 167 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,78,060 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,48822 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 6,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,77,283 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இன்று 19 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 3,565 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 6,108 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,03,094 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 70,397 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.