டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 289, கேரளாவில் 6394 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,83,876 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,125 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 428 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,73,855 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,896 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 6,394 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 7,90,883 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இன்று 25 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 3,210 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,110 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,22,421 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 65,059 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.