சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 828 பேரும் கோவையில் 1,728 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 12,772 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 23,66,493 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 29,801 பேர் உயிர் இழந்து 21,99,808 பேர் குணம் அடைந்து தற்போது 1,36,884 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 828 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,25,826 பேர் பாதிக்கப்பட்டு 7,854 பேர் உயிர் இழந்து 5,09,497 பேர் குணம் அடைந்து தற்போது 8,475 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்றும் இங்கு 1,728 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்திலும்  இரண்டாம் இடத்தில் 1,295 ஆக ஈரோடு மாவட்டம் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,05,269 பேர் பாதிக்கப்பட்டு 1,762 பேர் உயிர் இழந்து 1,86,852 பேர் குணம் அடைந்து தற்போது 16,655 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,51,759 பேர் பாதிக்கப்பட்டு 2,247 பேர் உயிர் இழந்து 1,45,640 பேர் குணம் அடைந்து தற்போது 3,872 பேர் சிகிச்சையில் உள்ளனர்.