சென்னை

மிழகத்தில்  இன்றைய (09/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 28,897 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 13,50,259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 15,648 பேர் உயிர் இழந்து 12,20,064 பேர் குணம் அடைந்து தற்போது 1,44,547 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 7,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 3,90,589 பேர் பாதிக்கப்பட்டு 5,209 பேர் உயிர் இழந்து 3,52,517 பேர் குணம் அடைந்து தற்போது 32,063 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 97,395 பேர் பாதிக்கப்பட்டு 1,052 பேர் உயிர் இழந்து 82,419 பேர் குணம் அடைந்து தற்போது 13,924 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 95,099 பேர் பாதிக்கப்பட்டு 759 பேர் உயிர் இழந்து 82,609 பேர் குணம் அடைந்து தற்போது 11,731 பேர் சிகிச்சையில் உள்ளனர்.