சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 1,134 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,04,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 11,954 .பேர் உயிர் இழந்து 7,82,915 பேர் குணம் அடைந்து தற்போது 9,781 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,21,587 பேர் பாதிக்கப்பட்டு 3,938 பேர் உயிர் இழந்து 2,14,612 பேர் குணம் அடைந்து தற்போது 3,037 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 51,029 பேர் பாதிக்கப்பட்டு 634 பேர் உயிர் இழந்து 49,329 பேர் குணம் அடைந்து தற்போது 1066 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 49,096 பேர் பாதிக்கப்பட்டு 733 பேர் உயிர் இழந்து 47,855 பேர் குணம் அடைந்து தற்போது 508 பேர் சிகிச்சையில் உள்ளனர்.