சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 1,052 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,09,014 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,012 .பேர் உயிர் இழந்து 7,87,611 பேர் குணம் அடைந்து தற்போது 9,391 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 311 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,22,888 பேர் பாதிக்கப்பட்டு 3,968 பேர் உயிர் இழந்து 2,15,898 பேர் குணம் அடைந்து தற்போது 3,022 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 51,483 பேர் பாதிக்கப்பட்டு 640 பேர் உயிர் இழந்து 49,856 பேர் குணம் அடைந்து தற்போது 987 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 49,408 பேர் பாதிக்கப்பட்டு 736 பேர் உயிர் இழந்து 48,085 பேர் குணம் அடைந்து தற்போது 533 பேர் சிகிச்சையில் உள்ளனர்.