சென்னை

மிழகத்தில்  இன்றைய (23/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 13,776 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,51,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 13,395 பேர் உயிர் இழந்து 9,43,044 பேர் குணம் அடைந்து தற்போது 95,048 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 3,842 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 3,01,541 பேர் பாதிக்கப்பட்டு 4,512 பேர் உயிர் இழந்து 2,68,859 பேர் குணம் அடைந்து தற்போது 31,170 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 71,474 பேர் பாதிக்கப்பட்டு 895 பேர் உயிர் இழந்து 62,393 பேர் குணம் அடைந்து தற்போது 8,186 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 71,474 பேர் பாதிக்கப்பட்டு 710 பேர் உயிர் இழந்து 64,621 பேர் குணம் அடைந்து தற்போது 5,830 பேர் சிகிச்சையில் உள்ளனர்.