சென்னை

மிழகத்தில்  இன்றைய (24/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 463 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,49,629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,478 பேர் உயிர் இழந்து 8,33,089 பேர் குணம் அடைந்து தற்போது 4,062 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,34,837 பேர் பாதிக்கப்பட்டு 4,145 பேர் உயிர் இழந்து 2,28,942 பேர் குணம் அடைந்து தற்போது 1,750 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 55,590 பேர் பாதிக்கப்பட்டு 682 பேர் உயிர் இழந்து 54,509 பேர் குணம் அடைந்து தற்போது 399 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 52,573 பேர் பாதிக்கப்பட்டு 780 பேர் உயிர் இழந்து 51,436 பேர் குணம் அடைந்து தற்போது 357 பேர் சிகிச்சையில் உள்ளனர்.