சென்னை

மிழகத்தில்  இன்றைய (25/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 467 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,50,096 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,483 பேர் உயிர் இழந்து 8,33,560 பேர் குணம் அடைந்து தற்போது 4,053 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,35,005 பேர் பாதிக்கப்பட்டு 4,148 பேர் உயிர் இழந்து 2,29,080 பேர் குணம் அடைந்து தற்போது 1,777 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 55,630 பேர் பாதிக்கப்பட்டு 683 பேர் உயிர் இழந்து 54,556 பேர் குணம் அடைந்து தற்போது 391 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 52,618 பேர் பாதிக்கப்பட்டு 780 பேர் உயிர் இழந்து 51,491 பேர் குணம் அடைந்து தற்போது 347 பேர் சிகிச்சையில் உள்ளனர்.