சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 838 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,21,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,166 பேர் உயிர் இழந்து 8,01,414 பேர் குணம் அடைந்து தற்போது 7,970 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் நேற்று 229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,26,456 பேர் பாதிக்கப்பட்டு 4,025 பேர் உயிர் இழந்து 2,20,072 பேர் குணம் அடைந்து தற்போது 2,359 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 52,649 பேர் பாதிக்கப்பட்டு 655 பேர் உயிர் இழந்து 51,251 பேர் குணம் அடைந்து தற்போது 742 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 50,260 பேர் பாதிக்கப்பட்டு 746 பேர் உயிர் இழந்து 49,034 பேர் குணம் அடைந்து தற்போது 480 பேர் சிகிச்சையில் உள்ளனர்.