சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 805 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,200 .பேர் உயிர் இழந்து 8,04,239 பேர் குணம் அடைந்து தற்போது 7,547 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் நேற்று 210 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,27,145 பேர் பாதிக்கப்பட்டு 4,038 பேர் உயிர் இழந்து 2,20,833 பேர் குணம் அடைந்து தற்போது 2,274 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 52,899 பேர் பாதிக்கப்பட்டு 659 பேர் உயிர் இழந்து 51,506 பேர் குணம் அடைந்து தற்போது 734 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 50,412 பேர் பாதிக்கப்பட்டு 750 பேர் உயிர் இழந்து 49,259 பேர் குணம் அடைந்து தற்போது 403 பேர் சிகிச்சையில் உள்ளனர்.