சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,30,772 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,264 பேர் உயிர் இழந்து 8,12,568 பேர் குணம் அடைந்து தற்போது 5,940 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,29,074 பேர் பாதிக்கப்பட்டு 4,065 பேர் உயிர் இழந்து 2,23,050 பேர் குணம் அடைந்து தற்போது 1,959 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 53,622 பேர் பாதிக்கப்பட்டு 662 பேர் உயிர் இழந்து 52,352 பேர் குணம் அடைந்து தற்போது 608 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 50,878 பேர் பாதிக்கப்பட்டு 757 பேர் உயிர் இழந்து 49,764 பேர் குணம் அடைந்து தற்போது 357 பேர் சிகிச்சையில் உள்ளனர்.