சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 574 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,33,585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,307 பேர் உயிர் இழந்து 8,16,205 பேர் குணம் அடைந்து தற்போது 5,073 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 155 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,29,860 பேர் பாதிக்கப்பட்டு 4,084 பேர் உயிர் இழந்து 2,23,986 பேர் குணம் அடைந்து தற்போது 1,790 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 53,918 பேர் பாதிக்கப்பட்டு 666 பேர் உயிர் இழந்து 52,738 பேர் குணம் அடைந்து தற்போது 514 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 51,160 பேர் பாதிக்கப்பட்டு 762 பேர் உயிர் இழந்து 50,020 பேர் குணம் அடைந்து தற்போது 378 பேர் சிகிச்சையில் உள்ளனர்.