சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,36,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,333 பேர் உயிர் இழந்து 8,19,306 பேர் குணம் அடைந்து தற்போது 4,676 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,30,675 பேர் பாதிக்கப்பட்டு 4,092 பேர் உயிர் இழந்து 2,24,980 பேர் குணம் அடைந்து தற்போது 1,603 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 54,176 பேர் பாதிக்கப்பட்டு 670 பேர் உயிர் இழந்து 53,077 பேர் குணம் அடைந்து தற்போது 429 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 51,365 பேர் பாதிக்கப்பட்டு 765 பேர் உயிர் இழந்து 50,250 பேர் குணம் அடைந்து தற்போது 350 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்றைய நிலவரப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது ஒரே ஒருவர் மட்டும் சிகிச்சையில் உள்ளார்.