சென்னை

மிழகத்தில்  இன்றைய (14/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 31,892 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 15,31,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 17,056 பேர் உயிர் இழந்து 13,18,982 பேர் குணம் அடைந்து தற்போது 1,95,339 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 6,538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 4,25,603 பேர் பாதிக்கப்பட்டு 5,621 பேர் உயிர் இழந்து 3,75,669 பேர் குணம் அடைந்து தற்போது 44,313 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,09,301 பேர் பாதிக்கப்பட்டு 1,173 பேர் உயிர் இழந்து 94,836 பேர் குணம் அடைந்து தற்போது 13,742 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 1,09,223 பேர் பாதிக்கப்பட்டு 837 பேர் உயிர் இழந்து 90,106 பேர் குணம் அடைந்து தற்போது 18,290 பேர் சிகிச்சையில் உள்ளனர்.