சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 1,218 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,97,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 11,883 .பேர் உயிர் இழந்து 7,75,602 பேர் குணம் அடைந்து தற்போது 10,208 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 345 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,19,526 பேர் பாதிக்கப்பட்டு 3,910 பேர் உயிர் இழந்து 2,12,390 பேர் குணம் அடைந்து தற்போது 3,226 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 50,317 பேர் பாதிக்கப்பட்டு 629 பேர் உயிர் இழந்து 48,696 பேர் குணம் அடைந்து தற்போது 992 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 48,647 பேர் பாதிக்கப்பட்டு 730 பேர் உயிர் இழந்து 47,413 பேர் குணம் அடைந்து தற்போது 504 பேர் சிகிச்சையில் உள்ளனர்.