வரலாற்றில் இன்று 30.10.2016
அக்டோபர் 30 (October 30) கிரிகோரியன் ஆண்டின் 303 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 304 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 62 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1485 – ஏழாம் ஹேன்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1920 – ஆஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி சிட்னியில் அமைக்கப்பட்டது.
1922 – முசோலினி இத்தாலியின் பிரதமர் ஆனார்.
1925 – ஜோன் லோகி பயர்ட் பிரித்தானியாவின் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்.
1945 – இந்தியா ஐநாவில் இணைந்தது.
1961 – சோவியத் ஒன்றியம் 50 மெகாதொன் அளவுள்ள “சார் பொம்பா” என்ற அணுகுண்டை வெடித்தது
1985 – சலேஞ்சர் விண்ணோடம் தனது கடைசி வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தது.
1991 – மத்திய கிழக்கு அமைதி மாநாடு மாட்ரிட் நகரில் ஆரம்பமானது.
பிறப்புக்கள்
1735 – ஜான் ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் (இ. 1826)
1821 – ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி, ரஷ்ய எழுத்தாளர் (இ. 1881)
1908 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1963)
1909 – ஹோமி பாபா, இந்திய அணிவியல், இயற்பியல் ஆராய்ச்சியாளர் (இ. 1966)
1962 – கொட்னி வோல்ஷ், மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட பந்து வீச்சாளர்
1977- டிமிட்ரி மாஸ்கரேஞாஸ், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்
இறப்புகள்
1910 – ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1828)
1963 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)
1973 – ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (பி. 1902)
1975 – குஸ்டாவ் லுட்வீக் ஹேர்ட்ஸ், ஜேர்மனிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
1979 – சுபத்திரன், இலங்கையின் முற்போக்கு இலக்கிய கவிஞர் (பி. 1935)