வரலாற்றில் இன்று 13.10.2016
அக்டோபர் 13 (October 13) கிரிகோரியன் ஆண்டின் 286 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 287 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 79 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
54 – ரோமப் பேரரசன் குளோடியசு அவனது நான்காவது மனைவியினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டதை அடுத்து அவளது மகன் நீரோ ரோமப் பேரரசனானான்.
1492 – கொலம்பசும் அவரது குழுவினரும் பகாமாசில் தரையிறங்கினர்.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1792 – வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வாஷிங்டன், டிசியில் இடப்பட்டது.
white-house
1884 – அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிறீனிச் தெரிவு செய்யப்பட்டது.
1885 – ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1917 – யாழ்ப்பாணம் மாநகராட்சிப் பகுதி மத்திய, மேற்கு, கிழக்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.
1923 – துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் இலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: புதிய இத்தாலிய அரசு ஜெர்மனி மீது போரை அறிவித்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: லாத்வியாவின் தலைநகர் ரீகா சோவியத்தின் செஞ்சேனையினால் கைப்பற்றப்பட்டது.
1953 – இலங்கைப் பிரதமர் பதவியை டட்லி சேனநாயக்கா துறந்தார்.
1970 – பிஜி ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
1972 – மொஸ்கோவுக்கு வெளியே ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 174 பேர் கொல்லப்பட்டனர்.
1972 – உருகுவாய் விமானம் ஒன்று ஆர்ஜெண்டீனாவுக்கும் சிலிக்கும் இடையில் அந்தீசு மலைகளில் மோதியது. டிசம்பர் 23 ஆம் நாள் 45 பேர்களில் 16 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.
1990 – சிரியப் படைகள் லெபனான் மீது தாக்குதலை ஆரம்பித்தது.
பிறப்புகள்
1911 – அசோக் குமார், இந்திய நடிகர் (இ. 2001)
1925 – மார்கரெட் தாட்சர், ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் (இ. 2013)
1931 – காவலூர் ராஜதுரை, ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)
1948 – நுசுரத் பதே அலி கான், பாக்கித்தானியப் பாடகர் (இ. 1997)
1977 – பால் பியர்ஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1977 – கிரேத் பத்தி, ஆக்ங்கிலேயத் துடுப்பாட்ட வீரர்
1978 – ஜெர்மெயின் ஓனீல், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1982 – இயன் தோப், ஆஸ்திரேலிய நீச்சல் வீரர்
இறப்புகள்
54 – குளோடியசு, ரோமப் பேரரசன் (பி. கிமு 10)
1911 – சகோதரி நிவேதிதை, ஐரிய சமூகப் பணியாளர், எழுத்தாளர், ஆசிரியை (பி. 1867)
2015 – கே. வேலாயுதம், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1950)