வரலாற்றில் இன்று அக்டோபர் 15
அக்டோபர் 15 (October 15) கிரிகோரியன் ஆண்டின் 288 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 289 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 77 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1582 – கிரெகொரியின் நாட்காட்டியை பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரி அறிமுகப்படுத்தினார். இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக இன்றைய நாளிற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
1655 – போலந்தின் லூம்லின் நகரில் இருந்த யூதர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
1815 – பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள புனித ஹெலெனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: முதற் தடவையாக நீர்மூழ்கிக் கப்பல் (ஹன்லி)ஒன்று கப்பல் ஒன்றை மூழ்கடித்தது.
1878 – தோமஸ் எடிசன் தனது மின்குமிழ் தயாரிக்கும் கம்பனியை ஆரம்பித்தார்.
1915 – முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா-ஹங்கேரி சேர்பியாவை முற்றுகையிட்டது.
1917 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனிக்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட டச்சு நடன மாது மாட்ட ஹரி பாரிசில் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாள்.
1932 – டாட்டா விமான நிறுவனம் (பின்னர் இது ஏர் இந்தியா எனப் பெயரிடப்பட்டது) தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: முன்னாள் பிரெஞ்சு முதல்வர் பியேர் லாவல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1951 – மெக்சிக்கோவின் லூயி மிரமோண்டெஸ் முதற்தடவையாக கருத்தடை மாத்திரையை அறிமுகப்படுத்தினார்.
1966 – ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளை வென்றெடுக்கவென கருஞ்சிறுத்தைக் கட்சி என்ற பெயரில் மார்க்சிய இயக்கம் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
1970 – மெல்பேர்ண் நகரில் வெஸ்ட் கேட் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 35 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1970 – அன்வர் சதாத் எகிப்தின் அதிபரானார்.
1987 – பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்தில் பெரும் புயல் கிளம்பியதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
1990 – பனிப்போரைத் தணிக்க உதவியமைக்காக சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் நோபல் பரிசு பெற்றார்.
1997 – நாசாவின் ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனி கோளை நோக்கி ஏவப்பட்டது.
2001 – நாசாவின் கலிலியோ விண்கலம் ஜுப்பிட்டரின் சந்திரனுக்குக் கிட்டவாக 112 மைல் தூரம் சென்றது.
2003 – மக்கள் சீனக் குடியரசு முதற்தடவையாக சென்ஷோ 5 விண்கலத்தில் விண்வெளி வீரர்களை அனுப்பியது.
பிறப்புகள்
கிமு 70 – வேர்ஜில், உரோமைக் கவிஞர் (இ. கிமு 19)
1542 – அக்பர், முகலாயப் பேரரசர் (இ. 1605)
1844 – பிரீட்ரிக் நீட்சே, செருமானிய இசையமைப்பாளர், கவிஞர் (இ. 1900)
1881 – பி. ஜி. வுட்ஹவுஸ், ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 1975)
1897 – முடிகொண்டான் வெங்கடராம ஐயர் இந்திய கருடாடக இசைப் பாடகர் (இ. 1975)
1913 – தெ. து. ஜயரத்தினம், யாழ்ப்பாணத்தின் கல்வியாளர் (இ. 1976)
1926 – மிஷேல் ஃபூக்கோ, பிரான்சிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1984)
1927 – பி. எஸ். அப்துர் ரகுமான், இந்தியத் தொழிலதிபர் (இ. 2015)
1931 – ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் (இ. 2015)
1931 – வீரமணி ஐயர், ஈழத்துக் கவிஞர் (இ. 2003)
1934 – என். ரமணி, இந்திய புல்லாங்குழல் கலைஞர் (இ. 2015)
1944 – அரியநாயகம் சந்திரநேரு, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2005)
1946 – யாழூர் துரை, ஈழத்து எழுத்தாளர், நாடக இயக்குனர் (இ. 2012)
1949 – பிரணாய் ராய், இந்திய ஊடகவியலாளர்
1957 – மீரா நாயர், இந்திய-அமெரிக்க நடிகை
இறப்புகள்
1389 – ஆறாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1318)
1917 – மாட்ட ஹரி, டச்சு நடன மாது, உளவாளி (பி. 1876)
1918 – சீரடி சாயி பாபா, இந்திய குரு (பி. 1838)
1946 – எர்மன் கோரிங், செருமானிய அரசியல்வாதி (பி. 1893)
1961 – சூர்யகாந்த் திரிபாதி, இந்தியக் கவிஞர் (பி. 1896)
1987 – தோமசு சங்காரா, புர்க்கினா பாசோவின் 5வது அரசுத்தலைவர் (பி. 1949)
2009 – தருமபுரம் ப. சுவாமிநாதன், சைவத் திருமுறை ஓதுவார் (பி. 1923)
2009 – தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து, தமிழ் ஆத்திரேலிய எழுத்தாளர் (பி. 1946)
2010 – சௌந்தரா கைலாசம், தமிழக எழுத்தாளர் (பி. 1927)
2012 – நொரடோம் சீயனூக், கம்போடியாவின் 1வது பிரதமர் (பி. 1922)
சிறப்பு நாட்கள்
ஆசிரியர் நாள் (பிரேசில்)
வெண்பிரம்பு பாதுகாப்பு நாள் (ஐக்கிய அமெரிக்கா)