வரலாற்றில் இன்று, அக்டோபர் 17
அக்டோபர் 17 (October 17) கிரிகோரியன் ஆண்டின் 290 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 291 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 75 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1091 – லண்டனில் பெரும் சூறாவளி இடம்பெற்றது.
1346 – இங்கிலாந்தின் மூன்றாம் எட்வேர்ட் ஸ்கொட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் லண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான்.
1448 – கொசோவோவில் ஹங்கேரிய இராணுவம் ஒட்டோமான் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.
1604 – ஜெர்மனிய வானிலையாளர் ஜொகான்னஸ் கெப்லர் வானில் திடீரென மிக ஒளிர்வுள்ள விண்மீன் (எஸ்.என். 1604) தோன்றுவதைக் கண்டார்.
1610 – பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னனாக முடி சூடினான்.
1660 – இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1662 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸ் டன்கேர்க் நகரை 40,000 பவுணிற்கு பிரான்சுக்கு விற்றான்.
1800 – டச்சு குடியேற்ற நாடான குரக்காவோ இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் வந்தது.
1805 – நெப்போலியனின் போர்கள்: ஊல்ம் நகரில் இடம்பெற்ற சமரில் ஆஸ்திரியப் படையினர் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகளிடம் வீழ்ந்தன.
1806 – எயிட்டியின் மன்னன் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டான்.
1907 – மார்க்கோனி அட்லாண்டிக் நகரங்களுக்கிடையேயான தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவின் நோவா ஸ்கோசியாவுக்கும், அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார்.
1912 – முதலாம் பால்க்கன் போர்: பல்கேரியா, கிரேக்கம், சேர்பியா ஆகியன ஒட்டோமான் பேரரசுடன் போரை அறிவித்தன.
1917 – முதலாம் உலகப் போரில் ஜெர்மனி பிரித்தானியா மீதான தனது முதலாவது குண்டுத்தாக்குதலை நிகழ்த்தியது.
1933 – அல்பேர்ட் ஐன்ஸ்டைன் நாசி ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார்.
1941 – இரண்டாம் உலகப் போரில் முதற் தடவையாக ஜெர்மனிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது.
1961 – பாரிசில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1965 – 1964 நியூயோர்க் உலகக் கண்காட்சி இரண்டாண்டுகளின் பின்னர் முடிவுற்றது. மொத்தமாக 51 மில்லியன் மக்கள் இக்கண்காட்சியைக் கண்டு களித்தனர்.
1966 – நியூயோர்க்கில் கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீயில் 12 தீயணைப்புப் படையினர் சிக்கி இறந்தனர்.
1979 – அன்னை தெரேசா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1995 – யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற இலங்கை இராணுவம் ரிவிரெச நடவடிக்கையை ஆரம்பித்தது.
1998 – நைஜீரியாவில் பெற்றோலியம் குழாய் வெடித்ததில் 1200 கிராமத்தவர்கள் கொல்லப்பட்ட்னர்.
2003 – தாய்ப்பே 101 உலகின் மிக உயரமான வானளாவி ஆனது.
2006 – ஐக்கிய அமெரிக்காவின் மக்கள் தொகை 300 மில்லியனை எட்டியது.
2006 – ஈழப்போர்: புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம், இலங்கை அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.
பிறப்புக்கள்
1817 – சையது அகமது கான், இந்திய மெய்யியலாளர் (இ. 1898)
1906 – கே. பி. ஹரன், இந்திய-ஈழப் பத்திரிகையாளர் (இ. 1981)
1912 – முதலாம் ஜான் பால் (திருத்தந்தை) (இ. 1978)
1913 – பூரணி, தமிழக எழுத்தாளர் (இ. 2013)
1915 – ஆர்தர் மில்லர், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2005)
1940 – சுவ்ரா முகர்ஜி, இந்திய எழுத்தாளர், ஓவியர் (இ. 2015)
1948 – ராபர்ட் ஜோர்டான், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)
1959 – அமீனா குரிப், மொரிசியசின் குடியரசுத் தலைவர், உயிரியற் பல்வகைமையாளர்
1965 – அரவிந்த டி சில்வா, இலங்கைத் துடுப்பாளர்
1970 – அனில் கும்ப்ளே, இந்தியத் துடுப்பாளர்
1972 – எமினெம்ரமெரிக்க ராப் இசைக்கலைஞர்
1983 – பெலிசிட்டி ஜோன்ஸ், ஆங்கிலேய நடிகை
இறப்புகள்
532 – இரண்டாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)
1849 – பிரடெரிக் சொப்பின், போலந்து செவ்விசைக் கலைஞர் (பி. 1810)
1887 – குசுத்தாவ் கிர்க்காஃப், செருமானிய இயற்பியலாளர் (பி. 1824)
1920 – ஜான் ரீட், அமெரிக்கப் பத்திரிகையாளர், கவிஞர் (பி. 1887)
1981 – கண்ணதாசன் கவிஞர் (பி. 1927)
2014 – மசாரு இமோடோ, சப்பானிய எழுத்தாளர் (பி. 1943)
சிறப்பு நாள்
உலக வறுமை ஒழிப்பு நாள்