இன்றைய முக்கிய செய்திகள்
அம்மா நல்ல முறையில் விரைவாக பூரண நலம்பெற்று வந்துவிடுவார் எப்போதுமே ஒய்வெடுக்காமல் மக்கள் பணியென வாழ்ந்து வந்தவர் விரைவில் வந்து தமிழக மக்களுக்கு நல்லப்பல திட்டங்களை செயல்படுத்துவார் – அதிமுக செய்தி தொடர்பாளர் சிஆர். சரஸ்வதி.
தமிழக முதலமைச்சருக்கு அளிக்கப்பட்டு வரும் பிசியோதெரபி சிகிச்சையால் விரைவாக குணமாகி வருகிறார் ஒரு வாரத்தில் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளது – முன்னாள் சுகாதார துறை அமைச்சருமான ஹண்டே.
சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பெண்கள் உட்பட 9 பேர் பலி.
அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்திபாலாஜி போட்டியிட தடை கோரி வழக்கு கடந்தமுறை போட்டியிட்ட போது வாக்காளர்களுக்கு பணம் தந்தார் என புகார் கூறப்பட்டுள்ளது – ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முறையாக தேர்தல் நடந்தால் திமுக மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெறும் கடந்த ஐந்து வருடங்களாக செயல்படாத அரசு தொடர்வது வேதனை தருகிறது – முக.ஸ்டாலின்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது சென்னை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்இன்று வெளியான தீர்ப்பில் வைகோவை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக உத்தரவிட்டது நீதிமன்றம்.
கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்தக்கோரி என்எல்சி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை.
சென்னையில் செயல்பட்டு வரும் சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் – முக.ஸ்டாலின்.
இந்தியாவில் கட்டாய வாக்களிப்பு சாத்தியமில்லை – தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி.
ஒட்டன்சத்திரத்தில் காவல் ஆய்வாளர் மற்றும் 3 போலீசருக்கு அரிவாள் வெட்டு.
சென்னை புதுப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் துணி உலர்த்தியபோது 6-வது மாடியில் சத்யமீனா தவறி விழுந்து உயிரிழந்தார்.
காவிரி விவகாரம் தொடர்பாக மக்கள் நலக்கூட்டணியினர் நாளை குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியை சந்தித்து பேசவுள்ளனர்.
வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டியில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கட்டிட தொழிலாளி மேலக்கோவில் பட்டியை சேர்ந்த நாகேந்திரன் மின்சாரம் தாக்கி பலி.
திமுக சமூகவலைதளப் பக்கங்கள் முடக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணை.
காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் திருநாவுகரசர் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களை மரியாதை நிமிர்ந்தமாக இன்று அசோக்நகர் அம்பேத்கர் திடலில் சந்தித்து பேசினார்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் வரும் நவ.19ம் தேதி நடைபெற உள்ளது இத்தொகுதியில் முதல்வர் நாராயணசாமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
மேக்கப் இல்லாமல் மனைவியை பார்த்து ‘அப்படியே ஷாக் ஆயிட்டேன்’: விவாகரத்து கோரிய கணவர்
சந்திரபாபு நாயுடுவின் மகனை விட ஒன்றரை வயது பேரன் பணக்காரன்
அமெரிக்க அதிபர் தேர்தல்: இறுதி விவாதத்தில் ஹிலாரி வெற்றி; ஏற்க மறுக்கும் டிரம்ப்
17 லட்சம் புதிய குடும்ப அட்டைகள்: அமைச்சர் காமராஜ் தகவல்
நடன அழகி மீது பணத்தை இறைத்து நடனமாடிய சமாஜ்வாடி எம்எல்ஏ
ஒரே நாளில் 6 லட்சம் ஏடிஎம் கார்டுகள்  முடக்கம்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
என்.எல்.சி. தலைமையகத்தை முற்றுகையிட முயன்ற ஆற்றுப்பாசன விவசாயிகள் 200 பேர் கைது
போலி ஆவணங்கள் தந்ததால் 500 பாஸ்போர்ட்டுகள் முடக்கம்: மதுரை மண்டல அலுவலர்
தமிழக ரயில்வேயில் 598 திருட்டு வழக்குகள்
உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
கொலை வழக்கு: சவூதி இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
தேர்தல் பிரசாரத்துக்கு திமுக அழைக்கவில்லை
“நோய் தடுப்பு மருந்துகளைக் கையாளுவதில் கூடுதல் கவனம் அவசியம்’
29 வகையான காய்ச்சல்களை கண்டறிய முடியும்: சுகாதாரத் துறை அமைச்சர்
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு: ஆந்திரம், தெலங்கானா கோரிக்கை நிராகரிப்பு
ராகுல் காந்தி ஒரு கழுதை: காங்கிரஸிலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ அதிரடி தாக்கு!
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5 புள்ளிகளாகப் பதிவு