ணவகொலைக்கு எதிரான படங்க ளுக்கு எதிராக உருவான படம் என்று எதிர்களை கண்ட போதும் திரைக்கு வந்து வசூல் ரீதியாக வெற்றி பெற்றது திரவுபதி. இதில் ரிச்சர்ட் ஹீரோவாக நடிக்க ஜோடியாக ஹீலா நடித்தி ருந்தார். அதேபோல் தேசிய விருது வென்ற டூ லெட் படத்திலும் நடித்தி ருந்தார். அவர் நடிக்கும் படம் ”எது தேவையோ அதுவே தர்மம்” குறும் படம் 20 விருதுகளை வென்ற துடன் தற்போது பிரபல நடிகர்கள் இயக்கு னர்களின் பாராட்டை பெற்றிருகிறது.
சமகால கடைநிலை மக்களின் வாழ்வி யலை அதன் தன்மை மாறாமல் அப்படியே நம் கண்முன் கொண்டு வந்துள்ளது ”எது தேவையோ அதுவே தர்மம்” என்ற குறும்படம். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும், 20க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது.
இப்படம் பற்றி து.ப.சரவணன் கூறியதாவது: “எது தேவையோ அதுவே தர்மம்” என்கிற இந்த வசனம் ‘ஆரண்ய காண்டம் ‘ படத்தில் முதலில் இடம்பெறும் வசனமாகும். அது பிடித் துப் போய் அதையே தலைப்பாக்கி இந்த குறும்படத்தை இயக்கி உள்ளேன்.
“சினிமாவில் 8 ஆண்டுகளாக இருக்கி றேன். பாலாஜி இயக்கிய ‘குள்ளநரிக் கூட்டம்’, கணேஷ் விநாயக் இயக்கிய ‘தகராறு’, ‘வீரசிவாஜி’ மற்றும் நிசப்தம் போன்ற படங்களில் உதவி இயக்குந ராகப் பணியாற்றினேன். பிறகு சினிமா கனவோடு இருந்த நான், என்னை நிரூபிக்க முதலில் குறும்படம் ஒன்றை எடுப்பது என்று முடிவு செய்து, இதற்கான கதையை தயார் செய்தேன். அப்போது உருவானதுதான் இந்த “எது தேவையோ அதுவே தர்மம்” என்ற குறும்படத்தின் கதை.
இப்படத்தைத் தயாரிக்க மூன்று லட்ச ரூபாய் வரை தேவைப்பட்டது. பண உதவி தேவைப்பட்டதால் வெளிநாட்டி லிருந்த என் தங்கை கணவர் சந்திர சேகரிடம் கதையை அனுப்பி, பிடித்தி ருந்தால் உதவி செய்யுங்கள் என்று உதவி கேட்டேன். அவரும் கதையைப் படித்து விட்டு உடனே ஐம்பதாயிரம் ரூபாய் எனக்கு அனுப்பி, படப்பிடிப் பை தொடங்கச் சொன்னார். அப்படி தொடங்கப்பட்டதுதான் இந்தப் படம்.

இப்படத்தின் நாயகன் ஸ்ரீநி ‘தோழர்’, ‘பொம்மவெச்ச பென்சில்’, ‘நானும் இந்த உலகத்துல தான் இருக்கேன்’ போன்ற குறும் படங்களிலும், ‘சூப்பர் டூப்பர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத் திலும் நடித்தவர். இவர் தற்போது ‘வெல்வெட் நகரம்’ என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் மூலம்தான் ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன், கதாநாயகி ஷீலா ராஜ்கு மார் ஆகியோர் அறிமுகமானார்கள். உலக அரங்கில் திரையிடப்பட்டு தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளைக் குவித்த ‘டு லெட்’ படத் தின் கதாநாயகியாக நடித்தவர்தான் இந்த ஷீலா. அதுமட்டுமல்ல அண்மை யில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘திரௌபதி’ படத்திலும் நாயகியாக நடித்தவர்.
இந்த படத் திற்காக பல வீடுகளை தேடி பார்த்தும் எந்த வீடும் திருப்தி கரமாக அமையவில்லை. அப்போது தான் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகை யில் ஆர்ட் டைரக்டர் சூர்யா தனது வீட்டையே எங்கள் எதிர் பார்ப்பிற்கு ஏற்றாற்போல் மாற்றி அமைத்து படப்பிடிப்புக்குக் கொடுத்து உதவி செய்தார்.
இவ்வாறு இயக்குநர் சரவணன் கூறினார்.
இப்படத்திற்கு இதுவரை 20 விருதுகள் கிடைத்துள்ளன. தமிழ் ஸ்டுடியோ வழங்கும் பாலுமகேந்திரா நினைவு விருது, இப்படத்தின் சிறந்த ஒளிப் பதிவுக்குக் கிடைத்தது. அது மட்டு மல்லாமல் அங்கே பார்வையாளர் களிடையே வாக்கெடுப்பு நடத்தி பெஸ்ட் பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதும், பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் இப்படத்திற்கு கிடைத்தது. குஜராத் அகமதாபாத்தில் நடந்த 3வது சித்ரபாரதி திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதுடன், ரூ.50 ஆயிரம் ரூபாய் பரிசும் நாயகன் ஸ்ரீநிக்கு கிடைத்தது. அதேபோல் இண்டோ ரஷ்யன் ஃபிலிம் பெஸ்டிவல், காஸ்மோ ஃபிலிம் பெஸ்டிவல் ஆகியவற்றிலும் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. இப்படி சுயாதீன பட விழா சென்னை 2020, பபாஸியின் புத்தக கண்காட்சி குறும்பட விழா என்று இதுவரை 20 விருதுகள் இந்த குறும்படத்திற்கு கிடைத்துள்ளன. இக்குறும்படத்தில் ஸ்ரீநி, ஷீலா ராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து லிங்கேஷ், தாஸ், நாகராஜன், ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சுமார் அரை மணி நேரம் ஓடும் இக்குறும்படத்தை செகண்ட் காட் புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் து.ப சரவணன், ப்ளாட்பார்ம் புரொடக்ஷன்ஸ் சார்பாக நாயகன் ஸ்ரீநி, க்ளிக் அண்ட் ரஷ் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஒளிப்ப திவாளர் வினோத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தை பார்த்து நடிகர் விஷால் , இயக்குநர்கள் பா. ரஞ்சித், லோகேஷ் கனகராஜ்,சீனு ராமசாமி, கார்த்திக் சுப்புராஜ் , ராஜுமுருகன், விஜய் மில்டன், அருண்ராஜா காமராஜ், மூடர் கூடம் நவீன் , நடிகை சுனேனா, ரியோ, மைம் கோபி ஆகியோர் பாராட்டியுள் ளனர்.
“ஒரு நல்ல குறும்படத்தைப் பார்த்த திருப்தி எங்களுக்குக்கிடைத்தது “என்று அவர்கள் மனதார படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.