கொரோனா ஊரடங்கால் உலக அளவில் பல மாதங்கள் பொதுமக்கள் கூடும் மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல இடங்கள் மூடப்பட்டிருந்தன.

சுமார் ஆறு மாதங்களாக முடங்கி கிடந்த மக்களுக்கு சில தளர்வுகளை அரசாங்கம் விதித்து வருகிறது .

விதிமுறைகளுக்கு உட்பட்டு திரையரங்குகள் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளன.

திரையரங்குகள் திறந்து முதலில் வெளியாகும் பிரம்மாண்டமான திரைப்படமாக கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ உள்ளது.

இந்நிலையில் டாம் க்ரூஸ் ஒரு சிறிய காணொலியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் முகக் கவசம் அணிந்து காரில் திரையரங்குக்குச் செல்லும் டாம் க்ரூஸ், வெளியே தன்னைப் பார்க்கும் ரசிகர்களுக்கும் கையசைத்துச் செல்கிறார். திரையரங்குக்கு வெளியே இருக்கும் ‘டெனெட்’ விளம்பரப் பலகை முன் நின்று ”இதோ மீண்டும் அரங்குக்கு வந்துவிட்டோம்” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.