சென்னை:

நாளை முதல் தலைமை செயலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பழைய ஒய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நாளை (15ம் தேதி) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் 4 ஆயிரத்து 500 பேர் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.