சென்னை:

திருச்சியில் நாளை பாஜ சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது என மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிப்டுள்ள அறிக்கையில், ‘‘நீட் தொடர்பான திமுக உட்பட்ட எதிர்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து நாளை (9ம் தேதி) மாலை 4 மணிக்கு தமிழக பாஜக சார்பில் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பாஜக தொண்டர்களும், பொது மக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.