கோவை: கோவை மாவட்டம் முழுவதும் நாளை மாலை முதல் திங்கட்கிழமை வரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சில நாள்களாக தினமும் கொரோனாவால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, 5ஆயிரத்தை தாண்டி வருகிறது.

ஆகையால் கொரோனா தாக்கம் அதிகம் காணப்படும் பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோயம்புத்தூரில் நாளை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்யாவசிய பொருட்கள் மற்றும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மளிகைக்கடை, இறைச்சிக்கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .