துாத்துக்குடி: திருசெந்துார் அருகே படகு கவிழந்து ஆறு சுற்றுலா பயணிகள் பலியனார்கள்.

திருச்செந்தூர் அருகே மணப்பாடு கடல் பகுதியில் இன்று 25 சுற்றுலா பயணிகள், மீன்பிடி படகில் கடலில் சென்றார்கள். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
“உரிய பாதுகாப்பு இன்றி மீன்பிடி படகில் சுற்றுலா பயணிகள் சென்றதே விபத்துக்கு காரணம்” என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.