நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை காண முடிகிறது.

கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மலையாள நடிகர் டொவினோ தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தனது சமூக ஊடகப் பக்கங்களில் தாமஸ் தெரிவித்துள்ளார்.

“வணக்கம், எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நான் தற்போது தனிமையில் இருக்கிறேன். எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. நலமாக இருக்கிறேன். எனவே, இன்னும் சில நாட்களுக்குத் தனிமைதான். காத்திருக்கிறேன். மீண்டும் நடித்து உங்களுக்குப் பொழுதுபோக்கைத் தர ஆர்வத்துடன் இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். விரைவில் மீண்டு வருவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CNrTUxlDf3D/