சென்னை:

ந்திய பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு இன்று 2வது நாளாக கோவளம் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின்போது , ஜின்பிங்கை தமிழில் பேசி வரவேற்ற பிரதமர் மோடி, 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே ஆழமான கலாச்சாரம் மற்றும் வணிக உறவு இருந்தது என்று கூறினார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்  இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முறைசாரா சந்திப்பு நிகழ்ச்சி, தமிழகத்தில் நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த 2 நாள் சந்திப்பு  சென்னையை அடுத்த புராதன நகரமான மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது.

நேற்று பிற்பகல் மாம்மலபுரம் சென்ற சீன அதிபரை பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் வரவேற்றார். அதைத்தொடர்ந்து. இருவரும் உரையாடியபடி அங்குள்ள சுற்றுலாப் பகுதிகளை பார்த்து ரசித்தனர். அங்குள்ள பல்லவ கால சிற்பங்களை மோடி, ஜின்பிங்குக்கு விளக்கினார். அதைத்தொடர்ந்து இரவு நடைபெற்ற  கலைநிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர். பின்னர்  ஜின்பிங்குக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து சென்னை திரும்பிய ஜின்பிங், கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார்.

தொடர்ந்து இன்று காலை, பிரதமர் மோடி தங்கி இருக்கும் கோவளம் அருகே உள்ள  தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலுக்கு சென்றார். அவரை பிரதமர் மோடி வரவேற்றார்.  மீண்டும் இரு தலைவர்களும் சிறிது நேரம் தனியாக சந்தித்து பேசினார். . கண்ணாடி அறையில் இருந்தபடி கடலையும் இயற்கையும் ரசித்தவடி இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையின்போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர். ஆலோசனைக்குப் பிறகு வெளியே வந்த இருவரும் கடற்கரையை ரசித்தனர்

.  அதன்பின்னர் மோடி, ஜி ஜின்பிங் தலைமையில் இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சீன வெளியுறவு மந்திரி வாங் யி, இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில்,   சீன அதிபரை வரவேற்று பேசிய மோடி, மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன் என தொடக்கத்தில் தமிழில் பேசினார். உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழில் நான் பேசுகிறேன் என்று தமிழின் பெருமையை  பறைசாற்றினார்.

தொடர்ந்து பேசியவர்,  இந்தியாவும் சீனாவும் உலகின் சிறந்த பொருளாதார சக்திகளாக இருக்கின்றன  என்று கூறியவர், சீனாவுக்கும், தமிழகத்துக்கும் இடையே சுமார் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  ஆழமான கலாச்சாரம் மற்றும் வணிக உறவு இருந்தது என்று கூறினார்.

முன்னதாக பேசிய சீன அதிபர் ஜின்பிங்,  இந்தியா வந்ததில் எனக்கு மிகுந்த  மகிழ்ச்சி,  தமிழகத்தின் விருந்தோம்பல் என்னை நெகிழ வைத்து விட்டது.இதற்காக மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.