சென்னை,

மிழக சட்டமன்றத்தை முடக்கி வைக்க உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலை அறிவித்தது. வரும் 12ந்தேதி வாக்குப் பதிவு நடைபெற இருந்த நிலையில், தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெற்றது உறுதியானதால் தேர்தல் ஆணையம்,  தேர்தலைரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில்  தமிழக சட்டமன்றத்தை முடக்கி வைக்க உத்தரவிடுமாறு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்.கே.நகரில் வாக்காளருக்கு அமைச்சர்களே பணம் கொடுத்தது உறுதியனதால், தமிழக சட்டமன்றத்தை முடக்கி வைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

டிராபிக் ராமசாமியின் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ய தலைமை நீதிபதி இந்திரா உத்தரவிட்டுள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.