ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த  பாஜக பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில், ராஜ்சமந்த் தொகுதியை சேர்ந்தவர் கிரண் மகேஸ்வரி (வயது 59) பல ஆண்டுகளாக பாஜகவில் பணியாற்றி வருகிறார். முதன்முதலாக கடந்த 1994ல் நடந்த நகராட்சி கவுன்சிலில் வெற்றி பெற்று கிரண் தலைவரானார் . பின்னர்  பாஜகவில் ராஜஸ்தான் பிரதேச மகளிர் அணியின் தலைவராக கடந்த 2000ல் நியமிக்கப்பட்டார். பிறகு கடந்த 2006ல் மகளிர் அணி தேசிய தலைவராகவும், கடந்த 2011ல் அக்கட்சியின் தேசிய பொது செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.

கடந்த 14வது மக்களவை தேர்தலில் உதய்பூர்-ராஜ்சமந்த் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக உயர்ந்தார்.. இதைதவிர அரசின் துறை சார்ந்த பல்வேறு குழுக்களில் உறுப்பினராகவும் இருந்தவர். கடந்த 2013ம் ஆண்டு ராஜஸ்தானின் ராஜ்சமந்த் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எம்எல்ஏவானார்.. பாஜக தேசிய துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அதையடுத்து கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு மீண்ம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.   இவருக்கு சத் நாராயண் என்ற கணவரும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த வாரம், இவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானது.  இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதாந்தா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..