சென்னை: தமிழகத்தில் ஜூலை 15ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நாளை மறுநாள்(ஜூன்29) முதல் ஜூலை 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து இருக்கிறது.

அதன்படி, திருச்சி – செங்கல்பட்டு, மதுரை – விழுப்புரம், அரக்கோணம் – கோவை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவை – மயிலாடுதுறை, திருச்சி – நாகர்கோவில், கோவை – காட்பாடி சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு அதன் முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

அதேநேரத்தில், சென்னை சென்ட்ரல் – டெல்லி செல்லும் ராஜ்தானி சிறப்பு ரயில் அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.