பொறையார்,

பொறையார் போக்குவரத்துக்கழக ஓய்வறை இடிந்த விழுந்த விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். தற்போது அந்த கட்டிடம் முழுவதுமாக அகற்றும்பணி நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொறையார், சிர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் பஸ்களை இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதன் காரணமாக பொறையார் பணிமனையில் இருந்து எந்த பேருந்தும் இயக்கப்படவில்லை. அதேபோல் மயிலாடுதுறை பணிமனை, சீர்காழி பேருந்து நிலையங்களில் இருந்தும்  பேருந்துகளை இயக்காமல் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.