சென்னை:  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு, அமெரிக்கா, இங்கிலாந்து மருத்துவர் களுடன் ஆலோசித்து சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம், கிரிட்டிகலான நிலையிலேயே  சீராக இருந்து வருகிறது.

.ஐ.சி.யூவில் இருக்கும் எஸ்பிபி.க்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ உதவியுடன் நுரையீரர் நிபுணர் மற்றும் பல்வேறு மருத்துவ நிபுணர்களுடன் தொற்று நோய்க்கான தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து எஸ்.பி.பி.க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.