சென்னை,

டிடிவியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 21ந்தேதி  நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு டிடிவி தினகரன்  வெற்றி பெற்றார். அவரது வெற்றியை  எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில்,  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன்  வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் அந்த தொகுதியில் 30 லட்சம் ரூபாய்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது  எனவே, அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று உயர்நீதி மன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், அதனை ரத்து செய்யும் அதிகாரம் கோர்ட்டிற்கு இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.