நெருஞ்சில் – Tribulus terrestris

இது தரையில் படர்ந்து புளிய இலை போல் 5 இதழ்கள் கொண்டதும், மஞ்சள் நிற பூவும் , முள்கனியை கொண்டதாகும். நெருஞ்சில் நீங்கள் பார்க்காவிட்டாலும் அதன் முள் உங்களை காலை பதம் பார்த்திருக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். ஏனெனில் இது வழியெங்கும் படர்ந்திருக்கும் தாவர வகையாகும்

நெருஞ்சில் இலையில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன.

வகைகள்

சிறு நெருஞ்சில்
யானை  நெருஞ்சில் (அ) பெரு நெஞ்சில்
செப்பு நெருஞ்சில்

இவைகளின் தண்டு, இலை, வேர், காய், பூ, முள் அனைத்தும் மருத்துவக்குணம் கொண்டதாக அமைகிறது. நெருஞ்சில் பூ சூரியன் உதிக்கும் திசையை நோக்கியே மலரும் தன்மை கொண்டதாகும்.

நெருஞ்சில் மருத்துவப் பயன்
1.கல்லடைப்பு
2.சிறுநீரக எரிச்சல்
3.உடல் வெப்பம், எரிச்சல்
4.சொட்டு சொட்டாக போகும் சிறுநீர் / எரிச்சலுடுடன் போகும் சிறுநீர்
5.வெண் புள்ளி
6.நீட் வேட்கை
7.சிறுநீர் குழாயில் ஏற்படும் வீக்கம்  மற்றும் சிறுநீரக குழாய் சதையடைப்பை சரி செய்கிறது
8.ஆனை நெருஞ்சில் மலட்டுத்தன்மை, வெள்ளைப் படுதல் , நீர் கடுப்பு , விந்து பெருக்குதல், ஆண்மை பெருக்குதல் போன்றவை குணமாக்குகின்றது
9.சிறு நீரக தொற்றில் இருந்து பாதுகாக்கிறது
10.இரத்த சர்க்கரை  அளவு / இரத்த கொழுப்பு அளவை கட்டுப்படுத்துகிறது

பெண்கள்

பெண் மலடு, வெள்ளைப்படுதல் , கர்பப்பைக்கோளாறு , சிறுநீரக எரிச்சல் , சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் , வெண் புள்ளிகள் உடலுக்கு குளிர்ச்சி , திரிதோசங்கள் நீங்கும்.

பயன்படுத்தும் முறை

நெருஞ்சில் காயை, 5 கிராம் அளவு எடுத்து 250 மிலி நீரில் கொதிக்க வைத்து அது 50 மில்லியாக சுண்ட வைத்து காலை, மாலை இருவேளை  48 நாட்கள் எடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

உங்கள் எடை 80 கிலோவாக இருந்தால் 800 மி.கி முதல் 1200 மி.கி வரை தினமும் பயன்படுத்த லாம், அதற்கு மேல் அருந்துதல் கூடாது.

மேலும், நெருஞ்சிலை சமூலம் (தண்டு, இலை, பூ, காய்) அனைத்தும் பொடி செய்து
சம அளவு அருகம்புல் பொடி, கொத்தமல்லி இலை, கீழாநெல்லி பொடி இவைகளுடன் சேர்த்து சுண்டவைத்து குடிநீராக்கி பருகி வந்தால் சிறுநீரகப் பிரசனைகள் நீங்கி , உடல் வெப்பத்தினைப் போக்கி நோய் வராமல் தடுக்கவும் பயன்படும்.

யானை நெருஞ்சில்
பெரிய முள் கனியை கொண்டது, இதை செடியுடன் பிடுங்கி 250 மிலி தண்ணீரில் ஊறவைத்து  காலை மாலை அந்ததண்ணீரைக் குடித்து வந்தால் வெப்பம், மேகம், எலும்புருக்கி நோய் , நீர் வேட்கை, சொட்டு மூத்திரம் போன்றவை நீங்கும். ஆண்மை பலப்படும், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய் கோளாறு நீங்கும்

மருத்துவர் பாலாஜி கனகசபை, M.B.B.S, PhD(Yoga)
அரசு மருத்துவர்
கல்லாவி (போச்சம்பள்ளி)
99429-22002