திருச்சி,
திருச்சி அருகே தனியார் தோட்டா தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 20 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தோட்டா தொழிற்சாலையில் விபத்து வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் 20க்கும் மேற்பட்டோர் பேர் பணியில் இருந்ததாகவும், பலர் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும், அவர்களை மீட்க தீயைணப்பு படையினர் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

வெடிவிபத்து நடந்த பகுதி
வெடிவிபத்து நடந்த பகுதி

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த முருங்கம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோட்டா தொழிற்சாலை உள்ளது.  இங்கு வெடி பொருட்கள் கிடங்கு உள்ளது. இந்த ஆலையின் இன்று காலை 60க்கும் மேற்பட்டோர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில் அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதில் குடோனின் ஒரு பகுதி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இடிந்த கட்டிடத்திற்குள் பலர் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
trichy4
இந்த விபத்தில் 15 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது. 6 வண்டிகளில் வந்த  தீயணைப்பு வீரர்கள்  மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த விபத்தினால் ஏற்பட்ட அதிர்வு 6 கி.மீ., சுற்றளவிற்கு உணரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறினார்.
இதன் காரணமாக அந்த வழியாக  செல்லும் பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.