கொல்கத்தா: மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.சமரேஷ் தாஸ் கொரோனாவால் உயிரிழந்து உள்ளார். மாநிலத்தில் உயிரிழந்த சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து  வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மேற்குவங்க மாநிலமும் ஒன்று.

இந்த நிலையில், தொற்று பாதிப்பு காரணமாக, கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சமரேஷ் தாஸ், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

சமரேஷ் தாஸ் மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள எக்ரா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. இவரது உயிரிழப்பு காரணமாக,  மேற்கு வங்காளத்தில் கொரோனா வைரஸால் இறந்த எம்எல்ஏக்கள்னி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

எம்எல்ஏ சமரேஷ் தாஸ் மறைவுக்கு  திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கு இரங்கல் தெரிவித்துள்ளார்.