ஐதராபாத்:  பாரத் பந்த் அறிவிப்புக்கு தெலுங்கானா அரசு ஆதரவளிக்கும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட வில்லை. இதையடுத்து, போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அந்த வகையில் வரும் 8ம் தேதி பாரத் பந்த்திற்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்துக்கு தெலுங்கானா மாநிலம் ஆதரவளிப்பதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானாவை சேர்ந்த விவசாயிகளும், தொண்டர்களும் விவசாயிகளின் பாரத் பந்த்தில் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.