வாஷிங்டன்:
மெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவருடைய பிரஞ்சு பிரதிநிதி இமானுவேல் மேக்ரான் ஆகியோர் நேற்று லெபனானுக்கு உடனடி உதவி வழங்கப் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஒரு தொலைபேசி உரையாடலில் லெபனானின் நிலைகுறித்து  இரு தலைவர்களும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொண்டனர். லெபனான் மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற போவதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் விமானப் படை லெபனான் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியதாக ட்வீட் செய்திருந்தது, மேலும் பிரின்ஸ் பிரதிநிதி இமானுவேல் மேக்ரான் லெபனானுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். லெபனான் மக்களுக்கு சில அத்தியாவசிய பொருட்களை வழங்கியதுமட்டுமில்லாமல், இனிவரும் நாட்களில் மருத்துவ உபகரணங்களையும் லெபனானுக்கு அளிக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெய்ரூட் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இரண்டு பெரிய வெடி விபத்துகள் ஏற்பட்டன. இந்த வெடி விபத்தில் குறைந்தது 150 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதே நேரத்தில் நகரத்துக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.