சென்னை,

டப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சார்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விசாரணை நாளை நடைபெறும் என்று  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.

சட்டசபையில் கடந்த 18-ந் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இதை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என திமுக தரப்பு வலியுறுத்தியது. ஆனால் சபாநாயகர் தனபால் இதை நிராகரித்துவிட்டார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற அமளி காரணமாக திமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, எதிர்க்கட்சியினர் இல்லாமலேயே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடித்து, எடப்பாடி அரசு வெற்றிபெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

சபாநாயகரின் முடிவை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர்  மு.க.ஸ்டாலின் மற்றும் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் கே. பாலு உள்ளிட்டோர்  வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில்,  சட்டசபை சம்பவங்கள் தொடர்பான  வீடியோ பதிவுகளையும், சட்டசபை குறிப்புகளையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணை ஏப்ரல் 10ந்தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில்,  வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தலைமை நீதிபதி இந்திரா அனுமதி அளித்துள்ளார்.