சென்னை,

திமுக அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளரும், பெரா வழக்கு மற்றும் இரட்டை இலை லஞ்சம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான டிடிவி தினகரனின் மாமியார் உடல் நலமில்லாமல் இன்று காலமானார்.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா பரோலில் வருவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

வயோதிகம் காரணமாக உடல்நலமில்லாமல், சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த டிடிவியின் மாமியார்  சந்தான லட்சுமி அம்மாள் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார்.

இவர்  சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவிதான் இந்த சந்தானலட்சுமி அம்மாள்.

சந்தான லட்சுமியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த சசிகலா வருவாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே கடந்த  ஏப்ரல் 15ம் தேதி மாரடைப்பு காரணமாக  சசிகலாவின் அண்ணன் வினோதகன் மகனான மகாதேவன் மரணமடைந்தார். அப்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சசிகலா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வர மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.