சென்னை:                                    

ஆர் கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் சசிகலா அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக துணைப் பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 23 ம்  தேதி வேட்புமனுத்தாக்கல் செய்யவிருப்பதாகவும், 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறுவேன் என்றும் கூறினார்.

இந்நிலையில் இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக டில்லி சென்றுள்ள ஓ பி எஸ், டிடிவி தினகரன் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட முடியாது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.