சென்னை:

அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஏ.இ.கோவில் தெருவில் நடைபெற்றது.

இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், ‘‘ ஒரு குடும்பத்திற்குள் சிக்கி விடாமல் அதிமுகவை மீட்கவே தர்மயுத்தம் தொடங்கப்பட்டது. யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக அதிமுகவை வளர்த்தவர் ஜெயலலிதா. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற தமிழகம் முழுவதும் வளம் வந்தும் ஸ்டாலினால் வெற்றி பெற முடியவில்லை’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘ஒரு குடும்பத்திற்குள் சிக்கி விடாமல் அதிமுகவை மீட்கவே தர்மயுத்தம் தொடங்கப்பட்டது. சர்க்காரியா கமிஷன் முதல் 2ஜி ஸ்பெக்ட்ரம் வரை திமுக ஆட்சியில் தான் நடந்தது. மின் பிரச்சனையை சரி செய்யாமல் 5 ஆண்டு காலம் திமுக ஆட்சி செய்தது.

திமுக ஆட்சியில் அடைந்த துன்பங்கள் மக்கள் மனதில் இருந்து அகலவில்லை. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள், அவிழ்க்கப்பட வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். டிடிடி தினகரனும் எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டாளிகள்’’ என்றார்.