சென்னை:

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி முதல்வர் பழனிசாமியை சந்திக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

அவரது இல்லத்தில் நடந்த இந்த கூட்டத்தில் டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.பி.க்களான நவநீதகிருஷ்ணன், விஜிலா, புதுச்சேரி எம்.பி. கோகுலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்தனர்.

இவர்களை தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட அறந்தாங்கி தொகுதியை சேர்ந்த டிடிவி. தினகரனின் ஆதரவு எம்எல்ஏ ரத்தினசபாபதி முதல்வரை சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ‘‘இரு அணிகளையும் விரைவில் இணைக்கும் நோக்கில் முதல்வரை சந்திக்க உள்ளேன்’’ என்று ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.