சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதி  இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளரான டிடிவி தினகரன்  சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்றார்.

அவருக்கு சட்டமன்ற தலைவர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் தங்கத்தமிழ் செல்வன், கரு.பழனியப்பன், செந்தில்பாலாஜி ஆகியோர் உடன் சென்றனர்.

பதவி ஏற்றதும், சபாநாயகர் தனபாருக்கு நன்றி தெரிவித்து பூங்கொத்து கொடுத்தார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் அந்த தேர்தலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளை ஓரங்கட்டிய தினகரன் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.