சென்னை:

டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, 3அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் கட்சித்தாவல் தடை சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில்,  அதிமுகவுக்கு எதிராக நான் செயல் படவில்லை என்று கூறிய கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, நான் வாக்களித்ததால்தான் எடப்பாடி இன்றுவரை முதல்வராக இருக்கிறார் என்று கூறினார்.

அதிமுக எம்எல்ஏக்கள் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தின சபாபதி ஆகிய 3 பேரும்  டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க அதிமுக சபாநாயகரிடம் புகார் மனு அளித்தது. அதைத்தொடர்ந்து சபாநாயகர் அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த  கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு,தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்தவன், நான் வாக்களித்ததால் தான் எடப்பாடி பழனிசாமி தற்போது முதல்வராகவே இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த 11 பேரை ஏன் இன்னும் தகுதி நீக்கம் செய்யவில்லை?என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சபாநாயகரின் நோட்டீஸ் கிடைத்தவுடன் முறையாக விளக்கம் கொடுப்போம் எம்.எல்.ஏ ரத்தின சபாபதி, தினகரனுடன் இருப்பதுபோல எல்லாருக்கும் படம் இருக்கிறது. அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.