அங்காரா:

துருக்‍கி நாட்டின் முக்‍கிய நகரான இஸ்தான்புல்லில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது,  பயங்கரவாதிகள்  நடத்திய கண்மூடித் தாக்‍குதலில் இந்தியர்கள் இருவர் உட்பட 39 பேர் பரிதாபமாக  பலியானார்கள்.

இந்த நிலையில், அந்நாட்டில் மேலும் ஒரு தாக்‍குதலை பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். இஸ்மிர் நகரில்ர நீதிமன்றத்தின்  அருகில் பயங்கரவாதிகள்  நடத்திய கார் வெடிகுண்டு தாக்‍குதலில், காவலர் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கிருந்த இரு பாதுகாப்பு கேமிராவில் பதிவான இந்த குண்டு வெடிப்பு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்‍குதலில் ஈடுபட்ட இரு பயங்ரவாதிகளையும் காவல்துறையினர் சுட்டுக்‍கொன்றனர்.

இத் தாக்குதலை  குர்தீஷ் பயங்கரவாத அமைப்பு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதானையடுத்து சம்பவம் நடந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டு அந்த பயங்கரவாத அமைப்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.